Sri Koorathazhwan and Sri Eechampadi Aachaan Varusha thirunatchathiram – Thai – Hastham – 11/02/2012
Sri Koorathazhwan – Kooram – Avathara Isthalam
FOR ARTICLE PLEASE CLICK HERE
koorathazwan-koil athan file.pdf
———————————————————————————————————————————————
Thirumazisai Azhwar Varusha thirunatchathiram – Thai – Magam – 09/02/2012
Thirumazisai Azhwar – AVATHARA ISTHALAM
FOR ARTICLE PLEASE CLICK HERE
THIRUMAZICHAI AZHWAR-KOIL ATHAN FILE.pdf
——————————————————————————————————————————————————-
Sri Embar Varusha thirunatchathiram – Thai – Punarpusam – 06.02.2012
FOR ARTICLES PLEASE CLICK HERE
————————————————————————————————————————————————————–
FOR ARTICLE PLEASE CLICK HERE
SRI AZAGHI MANAVALA PERUMAL NAYANAR VARUSHA THIRUNATCHATHIRAM – MARGAZI – AVITTAM – 28/12/2011
SRI PILLAI LOGACHARIAR, SRIRANGAM
THIRUVADI NILLAI – SRI NAYANAR
FOR ARTICLE PLEASE CLICK HERE
AZAGIYA MANAVALAPPERUMAL NAYANAR-KOIL ATHAN FILE.pdf
FOR GOSHTI PICTURES TAKEN AT THIRUVALLIKENI PLEASE CLICK HERE
http://www.pbase.com/svami/ahazhiya_manavalap_perumal_nayanar_thirunakshathiruam_celebratio
————————————————————————————————————————————————————–
THOANDARADIPODI AZHWAR, PERIYA NAMBIGAL, SRI KOORANARAYA JEEYAR AND
NAALOORACCHAN PILLAI – VARUSHA THIRUNATCHATHIRAM
MARGHAZI – KETTAI – 23/12/2011
THOANDARADIPODI AZHWAR, THIRUMANDANGUDI
PERIYA NAMBIGAL, SRIRANGAM
THIRUVADIEL SWAMI EMBERUMANAR
FOR ARTICLE PLEASE CLICK HERE
THIRUMAZISAI VANAPOJANA UTSAVAM-19.11.2011
THIRUMAZISAI AZHWAR, AVATHARA STHALAM
———————————————————————————————————————————-
Peyazhwar and Pinpazagia Perumal Jeeyar Varusha thirunatchathiram –
Aipasi Sathayam 05/11/2011
Peyazhwar, Thirumailai
FOR ARTICLE PLEASE CLICK HERE
——————————————————————————————————————————————
Puthathazhwar and Naduvil Thiruveedhi Bhattar Varusha thirunatchathiram – Aipasi Avittam – 04/11/2011
Puthathazhwar , Thirukkadalmalai
FOR ARTICLE PLEASE CLICK HERE
POIKAIAZHWAR-KOIL ATHAN KASTHURIRANGAN FILE.pdf
————————————————————————————————————-
Poigaiazhwar and Pillailokachariar Varusha thirunatchathiram – Aipasi Thiruvonam – 03/11/2011
Poigaiazhwar, Kanchipuram
Pillailokachariar, Srirangam
FOR ARTICLE PLEASE CLICK HERE
POIKAIAZHWAR-KOIL ATHAN KASTHURIRANGAN FILE.pdf
——————————————————————————————————————————————
Swami Manavalamamunigal Varusha Thirunatchathiram – 31/10/2011
NAMPERUMAL ACHARIYAN , THIRUVARANGAM
FOR ARTICLE PLEASE CLICK HERE
mamunigal – athan kasthurirangan file.pdf
FOR PICTURES PLEASE CLICK HERE
Kind courtesy : Gomadam Sri.Gopalakrishnan Azhagiyamanavalan Swami
Purattasi – Thiruvoonam – 06/10/2011
SRI ALAVANDAR, KATTURMANNAR KOIL
FOR ARTICLE PLEASE CLICK HERE
alavandar-koil athan kasthurirangan file.pdf
======================================================================================
HASTHAM – 04/08/2011
FOR ARTICLE PLEASE CLICK HERE
badrinarayana perumal-koil athan kasthurirangan file.pdf
======================================================================
THIRUAADI PURAM – 02.08.2011
Sri.Yadugiri Natchiyar, Sri.Andal and Sri.Kanthadi Thozappar – Varusha
Thirunatchathiram – Aadi – Puram – 02/08/2011
FOR ARTICLE PLEASE CLICK HERE
sri andal-koil athan kasthuriragan file.pdf
======================================================================================
SRI.PRATHIVATHI BHAYANKARAM ANNA SWAMI VARUSHA THIRUNATCHATHIRAM – AADI – PUSHYAM – 30/07/2011
SRI ANNA SWAMI – KANCHIPURAM
FOR ARTICLE PLS CLICK HERE
perathivathi bayangaram anna-koil athan kasthururangan file.pdf
Prathivadi Bhayankaram Anna Vaibhavam-koil athan file.pdf
——————————————————————————————————————————-
SRIMAN NATHAMUNIGAL AVATHARA UTSAVAM AT KATTUMANNAR KOIL – 2011
SRIMAN NATHAMUNIGAL – KATTUMANNAR KOIL
FOR ARTICLE PLS CLICK HERE
srimannathamunigal-koil athan kasthurirangan file.pdf
FOR PICTURES PLEASE CLICK HERE
http://www.pbase.com/svami/avatharautsavamkara
KIND COURTESY : SRI SRIVATSA KRISHNAN, THIRUVALLIKENI
——————————————————————————————————————————————
SRI PERIYAZHWAR, VADAKUTHIRUVEEDIPILLAI, VARUSHA THIRUNATCHATHIRAM – AANI – SWATHI – 10/07/2011
FOR ARTICLES PLEASE CLICK HERE
periyazhwar-koil athan kasthurirangan file.pdf
Brammothsavam of Sri Periyalwar at Srivilliputtur – 2011
FOR PICTURES PLEASE CLICK HERE
SRI MARANERI NAMBI VARUSHA THIRUNATCHATHIRAM – AANI -AAILYAM – 04/07/2011
FOR ARTICLE PLEASE CLICK HERE
maraneri nambi-koil athan kasthurirangan file.pdf
———————————————————–
SRI EACHAMPADI JEEYAR VARUSHA THIRUNATCHATHIRAM
AANI – THIRUVOONAM – 19/06/2011
FOR ARTICLE PLEASE CLICK HERE
eachampadi jeeyar-koil athan kasthurirangan file.pdf
————————————————–
SRI THIRUVARANGA PERUMAL ARIAYAR – VARUSHA THIRUNATCHATHIRAM -VAIKASI – KETTAI -15/06/2011
FOR ARCLE PLEASE CLICK HERE
thiruvarangaperumal aeriyar-koil athan kasthurirangan file.pdf
=========================================================================
SRI PARASARA BHATTAR AND SRI VEDAVYASA BHATTAR – VARUSHA THIRUNATCHATHIRAM – VAIKASI – ANUSHAM -14/06/2011
ARCLE PLEASE CLICK HERE
SRI THIRUVAIMOZI PILLAI – VARUSHA THIRUNATCHATHIRAM – VAIKASI – VISHAGAM-13/06/2011
FOR ARTICLE PLEASE CLICK HERE
========================================================================
KOIL SRIRAMA NAVAMI – 12.05.2011
========================================================================
SRI NAMPERUMAL AND SRI KOIL KOMAANDUR ELLAYAVALLI SWAMI VARUSHA THIRUNATCHATHIRAM – CHITHIRAI – REVATHI – 01.05.2011
FOR ARTICLES PLEASAE HERE
Namperumal -koil athan kasthurirangan file.pdf
========================================================================
KARA VARUSHA PIRAPPU – 14.04.2011
AZHWARGALS/ACHARIARGALS THIRUNATCHATHIRANGALS
PLS CLICK HERE FOR DETAILS
SRI PERIYAPRATIER AND SRI NANJEEYAR VARUSHA THIRUNATCHATHIRAM -PANGUNI – UTHIRAM – 19/03/2011
SRIRANGANATCHIAR
SRI BHATTAR THIRUVADIEL SRI NANJEEYAR
FOR ARTICLES PLEASE CLICK HERE
sri ranganatchiar and nanchiyar.pdf
கர வருடம்.
ஸ்ரீரங்கம் – விருப்பன் திருநாள்.
http://temp.srirangapankajamcom.officelive.com/WebSitePageEditor/aspctrl.aspx
========================================
நம்பெருமாள் கோடைத் திருநாள்
http://temp.srirangapankajamcom.officelive.com/WebSitePageEditor/aspctrl.aspx
ராமானுஜர் திருநாமப் பாட்டு
அம்மா! அந்தப் பஞ்சா யுதம் ராமா நுஜர் தான்! -நம்ம
ஆதி சேஷன் அவ தாரம் ராமா நுஜர் தான்!
எம்மான் அல்லிக் கேணிப் பெருமாள் ராமா நுஜர் தான்! – நம்ம
எல்லா ருக்கும் கதி யதி ராமா நுஜர் தான்!
உடை யவர் என்னும் மகான் ராமா நுஜர் தான்! -நம்மை
உய் விக்கும் ஆசார் யரும் ராமா நுஜர் தான்!
சட கோபன் பொன்ன டியும் ராமா நுஜர் தான்! -நம்மை
சாமி கிட்டச் சேர்ப்ப வரும் ராமா நுஜர் தான்!
மறை வாழ வந்த வரும் ராமா நுஜர் தான்! -அந்த
மாயன் மன சரிஞ் சவர் ராமா நுஜர் தான்!
குறை எல்லாம் தீர்ப்ப வரும் ராமா நுஜர் தான்! -நம்ம
குற்றங் களைப் பொறுப் பவர் ராமா நுஜர் தான்!
இளையாழ் வார் என்னும் சுடர் ராமா நுஜர் தான்! -அந்த
இலட்சு மண முனி யவர் ராமா நுஜர் தான்!
விளை நிலம் ஆன வரும் ராமா நுஜர் தான்! -வேத
வித்துக் களைத் தந்த வரும் ராமா நுஜர் தான்!
எதிரா ஜர் என்றே வந்தவர் ராமா நுஜர் தான்! -அந்த
எம்பெ ருமா னாரும் நம்ம ராமா நுஜர் தான்!
சதி களைச் சந்திச் சவர் ராமா நுஜர் தான்! -விஷ்ணு
சாம் ராஜ்ய அதி பதி ராமா நுஜர் தான்!
திருப் பாவை ஜீயர் நம்ம ராமா நுஜர் தான்! -நெஞ்சில்
தித்திக் கின்ற அமு தமே ராமா நுஜர் தான்!
அருட்ப் பார்வை கொண்ட வரும் ராமா நுஜர் தான்! -நம்ம
ஆள வந்தார் ‘ஆம் முதல்வன்’ ராமா நுஜர் தான்!
ஸ்ரீ பூத புரீ சர் ராமா நுஜர் தான்! -நல்ல
சீர் திருத்த வாதி நம்ம ராமா நுஜர் தான்!
ஸ்ரீ பாஷ்யக் காரர் நம்ம ராமா நுஜர் தான்! -நம்ம
சிந்தை யிலே நிற்ப வரும் ராமா நுஜர் தான்!
தேசி கேந் திரன் நம்ம ராமா நுஜர் தான்! -நம்மைத்
தேடித் தேடி அருள் பவர் ராமா நுஜர் தான்!
மா சில்லா மாணிக் கமே ராமா நுஜர் தான்! -நம்ம
மன செல்லாம் நெரஞ்சவர் ராமா நுஜர் தான்!
கோயி லண்ணன் ஆன வரும் ராமா நுஜர் தான்! -நெஞ்சைக்
கொள்ளை கொண்ட புண்ணி யரும் ராமா நுஜர் தான்!
தாயி னுள்ளம் கொண்ட வரும் ராமா நுஜர் தான்! -தம்மைத்
தஞ்ச மெனத் தந்த வரும் ராமா நுஜர் தான்!
அடியேன்,
ஆர்.வீ. ஸ்வாமி
(ரங்கநாத ராமானுஜ தாசன்)
எதிர்வரும் சித்திரைத் திருவாதிரையன்று (7-5-2011) ஸ்வாமிஎம்பெருமானாரின்
தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் திருநட்சத்திரம் பொலிகிறது.
அதனையொட்டி ஸ்வாமியின் இராமானுச வைபவம் என்னும் நூலின் திறவு கோலிலிருந்து
ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் எவ்வெப்போது தேவையோ அவ்வப்போது காலம் கொடுத்த கொடையாக உலகின் துயரகல உத்தமர்கள் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தி நாட்டை நன்னெறியில் நடத்தி நடமாடும் தெய்வங்களாய் வாழ்ந்து மறைந்தனர் என்பது சரித்திரம் கண்ட உண்மை.
இங்ஙனம் உலகை உய்விக்க வந்த உத்தமர்களுள் வைணவர் உள்ளங்களில் முதலிடம் பெரும்
மஹான்,
* ‘இளையாழ்வார்’ என்று பெரிய திருமலை நம்பிகளாலும்,
* ‘பூதபுரீசர்’ என்று ஆதிகேசவப் பெருமாளாலும்,
* ‘ஆம் முதல்வன் இவன்’ என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்,
* ‘எதிராஜர்’ என்றும், ‘இராமானுஜ முனி’ என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும்,
* ‘உடையவர்’ என்று பெரிய பெருமாளாலும்,
* ‘எம்பெருமானார்’ என்று திருக்கோட்டியூர் நம்பிகளாலும்,
* ‘திருப்பாவை ஜீயர்’ என்று பெரிய நம்பிகளாலும்,
* ‘இலட்சுமண முனி’ என்று திருவரங்கப் பெருமாளரையராலும்,
* ‘சடகோபன் பொன்னடி’ என்று திருமாலையாண்டானாலும்,
* ‘ஸ்ரீ பாஷ்யக்காரர்’ என்று கலைமகளாலும்,
* ‘தேசிகேந்திரன்’ என்று திருவேங்கடமுடையானாலும்,
* ‘கோயில் அண்ணன்’ என்று கோதை நாச்சியாராலும்
அழைக்கப்பட்ட, விண்ணரசை மண்ணவர்க்கு வாங்கித் தரும் பொருட்டு விண்ணகரம் விட்டு மண்ணகரம் வந்த விசிஷ்டாத்வைத சித்தாந்தக் காவலரும், ஈடு இணையற்ற ஜகதாசாரியருமான பெரும்பூதூர் வள்ளல் நம் ‘இராமானுசர்’.
காலமும் மனிதகுலமும் மறக்க முடியாத, மறக்க இயலாத, மறுக்க ஒண்ணாத கலியிருள் நீக்கிய யுக புருஷர் இராமானுசர். பல அவதாரங்களில் பகவானும் சாதியாத பல அருட்செயல்களை ஞானக்கடலாம் நல்லார்பரவும் இராமானுசர் தமது ஒரு பிறவியிலேயே சாதித்துள்ளார்.
மஹான் இராமானுசர் தகைய ஒண்ணாத தத்துவ தரிசி. சாத்வீக நெறி பரப்பிய சத்திய சீலர். மாசு மறுவற்ற ஆத்மகுணச் செம்மல். பூரண ஞானம் பொலிவுற்ற வடிவழகர். சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோர். அன்பினால் பகை வென்ற அருட்செல்வர். ஆழ்வார்களின் அடியொற்றிப் பூவுலகில் வைகுந்த வாழ்வளித்த ஆசார்ய குலதிலகம். இறைவன் உறைவிடங்களைச் சீராகச் செப்பனிட்ட திறன்மிக்க அறங்காவலர். அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானம் மிக்க சம நோக்குள்ள சமுதயவாதி.
“உலகம் சத்தியமல்ல. பொய்!” என்ற போலி வேதாந்த மாயையை முறியடித்து மண்ணையும் விண்ணையும் சத்தியமாக்கியவர் புண்ணியர் வாக்கிற்பிரியா, வைணவர்களின் இதயக்கனியாம் அண்ணல் இராமானுசர். வேதம் தமிழ்செய் மாறன் மெய்வழியிலே தம் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, பக்தியோடும், பாகவத நெறியோடும் தமிழ்ப் பாசுரப் பயிற்சிப் பண்ணையைப் பேணிக் காத்து, தமிழ் வளத்தைப் பெருக்கி,விழுதுவிட்டிருந்த வைணவம் ஒருநாளும் பழுதுபட்டிருக்காமல் பார்த்தவர்,
“பண்தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனிவேழம்”
என்றும்,
“கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு தனஉள்ளம் தடித்து அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன்”
என்றும் அழைக்கப்பட்ட, தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் வைணவத்தின் வளர்ப்புத் தாயாம் நம் இராமானுசர்.
பகவானுடைய கைங்கர்யங்களிலே எல்லாப் பணிகளும் ஒரே சிறப்புடைத்தன எனும் உளப்பாங்கிற்கு ஏற்பத் தமது வாழ்க்கையை வகுத்துக்கொண்டு, தீர்த்தக் கைங்கர்யம் செய்தல் முதல் பாஷ்யங்கள் செய்தல் வரை அனைத்தையுமே பகவானுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தவர் பல்கலையோர் தாம்மன்ன வந்த பரம பாகவதராகிய இராமானுசர்.
பால்முற்றத் தலைசாயும் பயிர்போலே பக்தி முற்ற முற்ற ஆணவம் தலைசாய்ந்து உலகியல் பற்று நீங்கப் பெற்ற மஹான் எண்ணருங்கீர்த்தி இராமானுசர்.
வைதீகம் தலைதூக்கி நின்ற காலத்தில் தெருக்குலத்தார் என்று உலகோர் சொன்னவர்களைத் திருக்குலத்தார் ஆக்கி உயிர்க்குலம் அனைத்தும் திருநாடு என்னும் பரமபதம் செல்லச் சரணாகதி என்னும் பொதுநெறியைப் பரப்பிய வேந்தர் தொண்டர் குலாவும் இராமானுசர்.
மண்ணகரைத் தாண்டி மற்றொரு வாழ்வு நமக்கு விண்ணகரில் உளதென்று உணர்ந்து, விருப்பமுள்ள உலகமக்கள் அனைவரும் தடையின்றித் திருநாட்டிற்குச் செல்வதற்காக விண்ணகரின் நிலைக்கதவம் தன்னை விரைந்தன்று திறந்து வைத்த உத்தமர் திக்குற்றகீர்த்தி இராமானுசர்.
ஞானமழை பொழிந்து வைணவத்தை வையப் பொதுவாய் வைத்து, 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்த குணம்திகழ்க் கொண்டல் இராமானுச வேழத்தைப் போன்ற ஆசார்யர் அவருக்கு முன்னும் கிடையாது பின்னும் கிடையாது என்று சொல்லும் வண்ணம் திகழ்ந்தவர் தரணியில் தமக்கு ஒப்புவமையில்லாத் தனியராம் இன்புற்றகீர்த்தி இராமானுசர்.
ஆசார்யர்கள் என்னும் நவரத்தின மாலையிலே நடுநாயகமாய் உள்ள மணி போன்ற பெருமையுடையவர் கதிரவனைவிட ஒளி மிகுந்துள்ள எதிராசர் என்னும் நம் உடையவர். இதனை,
“அமுநா தபநாதி சாயி பூம்நா
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: /
மஹதீ குரு பங்க்தி ஹாரா யஷ்டி:
விபுதாநாம் ஹிருதயங்கமா விபாதி //”
-(யதிராஜ சப்ததி-15)
என்பார் ஸ்வாமி வேதாந்த தேசிகன்.
ஆசார்யர் அறிவுறுத்துகின்ற திருப்பாதையில் சென்று திருநாடு சேர்ந்தால் பிறகு ஒரு கருப்பாதையில் கால்வைக்க நேராது என்பதை உணர்த்த 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த மஹான் இராமானுசரின் வாழ்க்கை அவருக்கு முன்னும் பின்னும் அவதரித்த பல மஹான்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய வரலாறு. அவருக்கு முற்பட்ட பூர்வாசார்யர்கள் அவரது திருமுடி சம்பந்தத்தாலும், அவருக்குப் பிற்ப்பட்ட ஆசார்யர்கள் அவரது திருவடி சம்பந்தத்தாலும் உயந்தார்கள்.
நல்லார் பரவும் இராமானுசரைக் கற்றார் காமுறு சீலர் ஆனார்; கண்டு மகிழ்ந்தார் கணக்கிலடங்கார்; அண்டி உயந்தோர் அளவற்றோர்; பாதம் பணிந்தோர் பாரில் சிறந்தார்.
இராம, கிருஷ்ண சரிதங்களைப் போலவே தேனும், பாலும், கன்னலும், அமுதுமாய இராமானுச சரிதையும் எவரையும் ஈர்க்கவல்லது. உலகமெல்லாம் அன்றும், இன்றும், என்றும் போற்றப்பட்டு வருகின்ற, கிருத யுகத்தில் ஆதிசேஷனாகவும், திரேதா யுகத்தில் லக்ஷ்மணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும், கலி யுகத்தில் இராமானுசராகவும் அவதரித்த அஸ்தமனமில்லாத சூரியனாம் இராமானுசருடைய பெருமை சிந்தைக்கும், சொல்லுக்கும் அப்பாற்பட்டதாகும்.
பிரபத்தி (சரணாகதி நெறி)யையே பிரதானமாகக் கொண்டு இன்றளவும் விசிஷ்டாத்வைதத்தை வழிநடத்தும் மஹான் இராமானுசரின் வாழ்க்கையிலிருந்து இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்! ஏராளம்!
சமயப் புரட்சி என்னும் இமயப் புரட்சி செய்த வைணவப் பெருங்கடல், வைணவத்தின் வைப்புநிதியாம் வள்ளல் இராமானுசரின் வரலாறு ஒரு காலப் பெட்டகம்! வைணவம் யாண்டும் போற்றும் ஞான ஏடு!
நமது உள்ளமாகிய ஏரியைத் தூர்வாரி வைத்துக் கொள்வோம்! காரேய் கருணை இராமானுசரின் அருள் மழையால் அது நிரம்பி வழியட்டும்!
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!
“பற்பமெ னத்திகழ் பைங்கழல் உந்தன் பல்லவ மேவிரலும்,
பாவன மாகிய பைந்துவ ராடை பதிந்த மருங்கழகும்,
முப்புரி நூலோடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்,
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல்நி லாவழகும்,
கற்பக மேவிழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்,
காரிசு தன்கழல் சூடிய முடியும், கனநற் சிகைமுடியும்,
எப்பொழு தும்எதி ராசன் வடிவழகு என்இத யத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
– (எம்பார்)
அடியேன்,
ஆர். வீ. ஸ்வாமி
(ரங்கநாத ராமானுஜ தாசன்)
கமலவல்லி – கஸ்தூரி ரங்கன் சேர்த்தி.
தர்மவர்மன் என்னும் நந்தசோழன் சந்திரபுஷ்கரிணியின் கரையில் பெரியபெருமாளுக்காக 18000 வருடங்கள் தவமிருந்ததாய் ஸ்ரீரங்க மஹாத்மியம் சொல்கின்றது.
தர்மமே உருவான இந்த சோழமன்னனுக்கும் முன்னதாகவே
இங்கு சமுத்ர ராஜனின் குமாரியும், சர்வலோகத்திற்கும் ஒளி தருபவளான ஸ்ரீரங்கநாச்சியார் பெரியபெருமாளின் வருகைக்காக, தாம் இப்புவியில் அவதரித்த காரணத்தினை ஈடேற்றுவதற்காக காத்திருக்கின்றாள். இந்த காத்திருத்தலும்
ஒரு பெரிய தவம்தானே..!
தர்மவர்மா எதற்காக தவம் செய்தாரோ அந்த தவத்திற்கான வரம் அருளப்பெற்றார். ஆம்..! பெரியபெருமாள் தர்மவர்மாவின் எதிரே கோடிசூர்ய பிரகாசத்துடன் கூடிய பிரணவாகார விமானத்துடனும், ஜயவிஜயாள் ஆகிய துவாரபாலகருடனும், ஆதிசேஷன், சேனைமுதல்வர், பெரிய திருவடி மற்றும் சிறியதிருவடி முதலான பரிவாரங்களோடும், தேவர்கள் கூட்டம் பூமாரி பொழிய
காட்சி தருகின்றார்.
ஸ்ரீரங்கநாச்சியாரான ஸ்ரீமஹாலட்சுமி பெருந்தவம் செய்த தர்மவர்மாவினை குளிர கடாக்ஷித்தாள்.
தாமே தர்மவர்மாவிற்கு ஒரு குமாரத்தியாகவும் பிறக்க நினைத்தாள். கமலவல்லியாக அவதரித்தாள்.
தர்மவர்மா சற்றும் எதிர்பாராத வரமிது.!
உறையூரில் இராஜகுமாரியாக கம்பீரமாய் அமர்ந்து அருள்புரிந்த இந்த தாயாரினை நம்பெருமாள் அழகிய மணவாளனாக வந்து
பங்குனி ஆயில்யநட்சத்திரத்தன்று ஆட்கொண்டார்.
நம்பெருமாள் பொறுத்தமடடில் கல்யாண உற்சவம் என்பதே கிடையாது. இவர்கள் தோன்றும்போதே ஒன்றாய் திவ்யதம்பதிகள்தாம்.
பூமியில் அவதரித்தபின் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒன்றாய் சேர்ந்து அடியவர்களை ஆட்கொண்டு அருள்பாலித்தனர்.
அருள்பொங்கும் திருநாளாம் இப்பங்குனித் திருநாளில் இத்திவ்யதம்பதிகளை வணங்கி உய்வோம்..!
ஆதிபிரும்மாத் திருநாள்
11.03.2011 முதல் 21.03.2011
திருவரங்கா! உனை வழிபடும் போதினில் தர்மவர்மாவுடனே
அருந்தவ ரிஷிகளும், மாந்தரும் அங்கே ஒருங்கே திரண்டிட்டுன்
திருத்தரிசனங்கள் கண்டே உவகையும் பொங்கியே துதித்தார்கள்!
ஒரு சிறுகாலம் அனைவரும் அரங்கா! உந்தன் தரிசனத்தைத்
திருநகர் இதிலே கண்டே துதிக்க ஆசைமிகக்கொளவே
அருளாளர் அத்தர்மவர்மாவும் வீடணன் அவனிடமே
ஒரு பணிவோடு அதனைச் சொல்லியே அவன் அனுமதியோடு
திருப்பிரம்மோத்ஸவம் நடத்தியே உகந்தான்! பின்னர் வீடணனும்
பெருமானே! உனை விமானத்துடனே எடுக்கவே முயன்றிட்டுன்
திருச்சங்கல்ப்பத்தால் இயலாமல் போயிட அவன் வருத்தத்
திருப்பங்குனியில் ரோஹிணி நண்பகல் அபிஜித் முகூர்த்தத்தில்
திருவரங்கத்தே திருப்பிரதிட்டை ஆனாய் அரங்கசோ!
– (108 / 52 – 54)
(திரு ஆர்.வீ.ஸ்வாமியின் திவ்யதேச மணிமாலையிலிருந்து)
பிரும்மலோகத்தில் பிரும்மாவினாலும், அயோத்தியில் ஸ்ரீராமபிரான் உள்பட சூரியகுல மன்னர்களாலும், கொண்டாடப்ட்ட மிகமிக பழமைமிகு உற்சவம் இதுவே..!
ஸ்ரீரங்கத்தில் அரங்கன் அமர பெருந்தவம் செய்த தர்மவர்மாவும், ராக்ஷஸகுல தர்மிஷ்டனான வீபிடணனும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய உற்சவம் இதுவே..!
திருவரங்கத்தில் அரங்கன் அமர்ந்தபின் கொண்டாடிய முதல் உற்சவமும் முதன்மை பெற்ற உற்சவமும் இதுவே..!
அரங்கனின் ஜன்ம நட்சத்திரம் ரோஹிணி..! பின்னாளில் கிருஷ்ணராக அவதரித்தப்போதும் இந்த ரோஹிணியில்தான் அவதரித்தார்..! ரோஹிணியின் மீதுள்ள மாறாப் பற்றினால், தான் முதன்முதலாக கொண்டாடும் இந்த ஆதிபிரும்மாத் திருநாளை ரோஹிணியில் கொண்டாடத் துவங்குகின்றார்..!
ஸ்ரீரங்க மஹாத்மியத்தின் அவதாரிகையில், பிரும்மலோகத்தில் சாதாரண மானுடர்கள் உய்வதற்கு என்னவழி என்று நான்முகனும் மற்றைய தேவர்களும் சிந்தித்துக் கொண்டிருக்கையில்தான், ஸ்ரீமந் நாராயணன் இந்த பிரணவாகார விமானத்துடனும், துவாரபாலகர்களுடனும் மிகமிக விசேஷமாக திருப்பாற்கடலில் அவதரித்ததாகக் கூறுகின்றது. அங்கேயே நிலை கொண்டிருந்தால் மானுடம் எங்ஙனம் உய்வது..? எனவேதான் திருவரங்கத்தினைத் தேர்ந்தெடுத்து குடிகொண்டார். எல்லாம் சரி..! தாயார் கடாக்ஷம் இல்லாமல, அவளது அருள் இல்லாது உய்வது எப்படி..?
இத்திருமகன் திருவரங்கத்திற்கு வருகைதரும் முன்பே திருமாமகளான ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கத்திற்கு வந்துவிட்டதாக “திருஆனைக்கா புராணம்“ (திருவானைக்கோவில் பற்றிய புராணம் – திரு.கச்சியப்பர் எழுதியது) பறைகின்றது. தாயார் முன்கூட்டியே எழுந்தருளி காத்திருந்ததால்தான், பெருமாள் இங்கு எழுந்தருள ஒரு காரணமாயும் இருக்கலாம்..!
தமக்கு மிகுந்த சந்தோஷத்தினை அளிக்கக்கூடிய திருவரங்கம் எழுந்தருளியாயிற்று..! எதனால் சந்தோஷம்..! மிக மிக முக்யமான காரணம் இங்குதான் மானுடம் உய்வு பெறும்..! முக்தி அடையும்..! தன்னுடைய சொத்து தன்னை வந்தடையும் எனும் மகிழ்வு..!
தாயாரும் பெருமாளும் ஒருமித்து ஒன்றாய் இத்திருநாளில் பங்குனி உத்திரத்தன்று சேர்நதருளினர். பெருமாளின் அவதாரமாகிய ரோஹிணியில் உற்சவம் தொடக்கம்..! தாயாரின் அவதார திருநாளாகிய பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி..! தாயார் பூரித்துப் போனாள்..! இம்மணணில் பிறந்த ஜீவன்கள் எல்லாம் கரைசேர்க்க இத்திருநாளில் சங்கல்ப்பம் கொண்டனர் திவ்யதம்பதிகள்..!
இதனை பூரணமாக உணர்ந்தவர் நம் ஆச்சார்யரான ஸ்ரீஇராமனுஜர். சரணாகதி அடைய நல்லதருணம் இதுவே என உணர்ந்து “கத்யத்ரயம்“ என்னும் ஸ்ரீரங்ககத்யம், சரணாகதிகத்யம், வைகுண்டகத்யம் ஆகிய மூன்று ரத்னங்களாகிய பாசுரங்களை சமர்ப்பித்து, சாமானியர்களாகிய நாம் உய்யும் வழி காட்டினார்.
வாருங்கள்..! நாமும் இராமனுஜர் காட்டிய வழியில் இத்திவ்ய தம்பதிகளை வணங்குவோம்..! வாழ்வதனில் உய்வடைவோம்..!
ஸ்ரீரங்கம் – முரளீ பட்டர் 11.03.2011-
நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல்
(மூன்றாம் திருநாள்)
மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும்!
இன்றைய திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம்.
அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன்.
பேரனின் திருநாமம் “ரங்கன்“. ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம்.
பேரன் “சவரம் செய்துகொண்டு திரும்பி வந்துவிடுகிறேன்“ என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால் அவன் மீது மாறாத பக்திக் கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்!.
நன்றி பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கின்றான்.
இங்கு ஜீயர்புரத்தின் காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் “ரங்கா..! ரங்கா..!“ என கதறிக் கொண்டிருக்கின்றாள்..
அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரனது ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன்..!
தவித்துப்போன பாட்டி பதட்டம் தணிந்தாள். தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் படைத்தாள்.
இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான்.
அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணைக் கண்டு
திருவரங்கம் நோக்கி வணங்கியது ஜீயர்புரம்..!
இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்துவிடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார்.
ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முதல் மண்டகப்படி அங்குள்ள “சவரத் தொழிலாளர்களின்“ மண்டகப்படி.
ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளியிருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின் பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார். “எம்பெருமானார் வைபவத்தில்“ இந்நிகழ்வு உள்ளது என்கின்றார்.
இருந்திருக்கலாம்..! எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம்.
ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே “பழய சோறும் மாவடுவும்”. அதே போன்றுதான் இன்றளவும்..! – “பழய சோறும் மாவடுவும்“.
ஸ்ரீரங்கம் – முரளீ பட்டர் 12.03.2011.
========================================================================
ராதேக்ருஷ்ணா
நான் சரியானால் எல்லாம் சரியாகும் !
யார் பொய் சொன்னால் எனக்கென்ன ?
நான் உண்மையாய் இருந்தால்
எனக்கு நல்லது .
. .
யார் திருட்டுத்தனம் செய்தால் எனக்கென்ன ?
நான் நேர்மையாய் இருந்தால்
எனக்கு ஆனந்தம் . . .
யார் என்ன பாவம் செய்தால் எனக்கென்ன ?
நான் பாவம் செய்யாதவரை
எனக்கு நிம்மதி . . .
யார் சோம்பேறியாய் இருந்தால் எனக்கென்ன ?
நான் சுறுசுறுப்பாய் இருந்தால்
என் வாழ்வில் வெல்வேன் . . .
யார் யாரைப் பற்றி குற்றம் சொன்னால் எனக்கென்ன ?
நான் யாரையும் குற்றம் சொல்லாதவரை
என் மனது சமாதானமாக இருக்கும் . . .
யார் கடமையில் தவறினால் எனக்கென்ன ?
நான் என் கடமையை ஒழுங்காகச் செய்தால்
என் வாழ்க்கை சிறக்கும் . . .
யார் பக்தி செய்யாவிட்டால் எனக்கென்ன ?
நான் உண்மையான பக்தி செய்தால்
எனக்கு க்ருஷ்ணன் கிடைப்பான் . . .
யாருக்கு அஹம்பாவம் இருந்தால் எனக்கென்ன ?
எனக்கு அஹம்பாவம் வராதவரை
எனக்கு தொந்தரவில்லை . . .
யார் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன ?
நான் உருப்படியாக வாழ்ந்தால்,
என் க்ருஷ்ணன் சந்தோஷப்படுவான் . . .
யார் துரோகம் பண்ணால் எனக்கென்ன ?
நான் யாருக்கும் துரோகம் நினைக்காத வரை
எனக்கு நிம்மதியாய் தூக்கம் வரும் . . .
யார் ஓடிப் போனால் எனக்கென்ன ?
நான் பிரச்சனைகளைக் கண்டு ஓடாதவரை
எல்லாவற்றையும் ஜெயிப்பேன் . . .
யார் ஏமாற்றினால் எனக்கென்ன ?
நான் அடுத்தவரை ஏமாற்றாதவரை,
என் வாழ்வில் தோல்வியில்லை . . .
யார் கேவலப்படுத்தினால் எனக்கென்ன ?
என் க்ருஷ்ணன் என்னைக் கேவலமாக
நினைக்காதபடி நான் வாழ்ந்தால் உத்தமம் . . .
இவையெல்லாம் எனக்கு என் க்ருஷ்ணன்
சொன்ன ரஹஸ்யங்கள் . . .
நன்மையும், தீமையும் எனக்கு
யாரும் தர முடியாது . . .
அதனால் நான் தான் சரியாகவேண்டும்
. . .
நான் சரியானால் என் வாழ்க்கை நன்றாயிருக்கும் !
நான் சரியாகாத வரை,
என் வாழ்க்கை சரியாகாது ! ! !
என்னைச் சரி செய்யாமல்,
அடுத்தவரைப் பற்றி பேசுவதால் எனக்கென்ன ?
என்னைச் சரி செய்யாமல்,
அடுத்தவரை குறை கூறுவதால் எனக்கென்ன ?
நான் சரியாக ஆகும் வரை ஓயமாட்டேன் . . .
நான் சரியானால் எல்லாம் சரியாகும் !
இதுவே என் தாரக மந்திரம் !
நான் சரியானால் எல்லாம் சரியாகும் !
– நன்றி Guruji Gopalavallidas5:56pm Feb 22
ஈனச்சொல் ஆயினுமாக ஏறிதிரைவையம்முற்றும்
ஏனத்துருவாய் இடந்த பிரான் – இருங்கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா எவர்க்கும்
ஞானப்பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே
——————————————————————————————————————————————-
Fansawadi Sri Srinivasar Avathara Utsavam, Mumbai
PICTURES COURTESY: Sri.T.A.Bharathwaj, Kanchipuram
FOR PICTURES PLS CLICK HERE
https://picasaweb.google.com/athankasturi
/FansawadiSriSrinivasarAvatharaUtsavamBombay?feat=directlink
—————————————————————————————————————————————————————
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
Brindavan Samprokshanam
THIRUMALAI SRI ANANTHAZWAN 957TH AVATHARA UTSAVAM – 27.02.2011
FOR PICTURES PLS CLICK HERE
https://picasaweb.google.com/athankasturi/
THIRUMALAISRIANANTHAZWAN957THAVATHARAUTSAVAM27022011?feat=directlink
——————————————————————————————————————————————-
கோவிந்தா கோவிந்தா !!
பலருக்கு இது ஒரு ஏளனச் சொல். படித்தவர் முதல் பாமரர் வரை , பகுத்தறிவாளர் முதல் பரதேசி வரை அனைவர் வாயில் இருந்து வரும் சொல் இது. பக்தி மேலீட்டால் கோவிந்தா கோவிந்தா என்று கதறும் சிலரை தவிர பெரும்பாலும் ஏளனமாகவும், பணம் பறிபோனாலும் கூறும் சொல்லாகிவிட்டது. சரி, இந்த கோவிந்தா என்னும் பெயர் எப்போது கண்ணனுக்கு சூட்டப்பட்டது ?
இந்திரனின் கர்வத்தைப் போக்க ஆயர்களைக்கொண்டு கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ய வைத்தான் கண்ணன். கோபம் அடைந்த இந்திரன், பெருமழை பொழிய கோவர்த்தன மலையையே குடையாக பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் கன்றுகளையும் காத்தான் கண்ணன். கண்ணன் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் என்றுணர்த்த இந்திரன், கண்ணன் திருவடிகளிலே சரணடைந்தான். அப்போது பசுக்களை காப்பவன் என்னும் பொருள் பட கோவிந்தா என்று பேர்சூட்டி தேவலோக பசுவான காமதேனுவின் பாலைக்கொண்டு பட்டாபிஷேகம் செய்து களிப்புற்றான். இந்த நிகழ்வை கோவிந்த பட்டாபிஷேகம் என்று ஸ்ரீமத் பாகவதம் கொண்டாடுகிறது.
கோவிந்தா என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது என்றில்லை. விந்தன் என்றால் ரக்ஷகன். கோ என்றால் பூமி. பூமியை பிரளயார்ணவதில் இருந்து ரக்ஷித்த ஆதி வராஹனும் கோவிந்தன் தான்!. பெருமாளுக்கு சௌலப்யாதி குணங்கள்
எப்போது தோன்றினதோ அப்போதே அவனுக்கு உண்டானது இந்த பெயர்.
திரௌபதிக்கு ஆடை சுரந்ததும் இந்த நாமம் தான். கௌரவர்கள் சபை, கண் தெரியாத அரசன், கண்ணிருந்தும் குருடர்களாக அமைச்சர்பெருமக்கள், பிணம் தின்னும் பேயைப்போல் துரியோதனன், நாட்டை இழந்து, மானமிழந்து, தன்னையே அடிமை ஆக்கி , தன் தாரத்தையும் சூதில் தாரை வார்த்த பாண்டவர்கள் என அவலங்கள் நிறைந்த சபைக்கு இழுத்து வரப்பட்டாள் பாஞ்சாலி. துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையை பற்றி இழுக்கும் போது போராடிப்பார்த்தாள். இனி நம்மால் ஆவதற்கு ஒன்றும் இல்லை என உணர்ந்து இருகையையும் மேலே உயர்த்தி ” ஹே த்வாரகா நிலையா, அச்சுதா, கோவிந்தா புண்டரீகாக்ஷா… ரக்ஷமாம் சரணாகதம்” என்று சொன்னவுடன், அவள் சொன்ன கோவிந்த நாமமே புடவை சுரந்ததாம். பெருமாள் வந்து காக்கும் வரை காத்திருக்காமல் அவன் திருநாமமே ரக்ஷகமாக அமைந்தது. பகவானுக்கு வந்த ஆபத்தும் காக்கப்பட்டது.
ஆண்டாள் திருப்பாவையில் கோவிந்த நாமத்தை “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்றும் நாராயண நாமத்தை சிறுபெயர் என்றும் குறிப்பிடுகிறாள்.
க்ஷத்திரபந்து என்பான், கொடுமையே செய்து, மனதாலும் பிறர்க்கு நல்லது நினையாது கூற்றவனைப்போல் வாழ்ந்து வந்தான். நாரதர் மோக்ஷ ஆனந்தத்தை பற்றி சில அன்பர்களுக்கு ச்லாகித்ததை கேட்டான் க்ஷத்திரபந்து. அவனுக்கும் ஆசை பிறந்தது. நாரதரிடம் ஆனந்தமடையும் வழியைக்கேட்டான். நாரதரும் நல்வழிகளை உபதேசித்தார். ஓர் இரு நாட்கள் அவ்வழி நடக்க முயற்சி செய்தான். முடியவில்லை பாவம். மீண்டும் நாரதரை சந்தித்தான், வேறு உபாயம் கூறுமாறு கேட்டான். நாரதரும் அவனுக்காக இரங்கி கோவிந்த நாமத்தை கூறுமாறு உபதேசித்து மறைந்தார். க்ஷத்திரபந்துவும் தான் எந்த செயலை செய்தாலும் கோவிந்தா கோவிந்தா என்று கூறிக்கொண்டே செய்தான். கோவிந்த நாமத்தின் பாப ஹரத்வம் என்னும் குணத்தினாலே இவன் செய்யும் பாபங்கள் யாவும் விலகியது. அடுத்த பிறவியில் பாகவதர்களுக்குத்
தொண்டு புரியும் ஜன்மம் எடுத்து முடிவில் மோக்ஷானந்ததைப்
பெற்றான். இதனால் தான் நம்மிடம் இருந்து எது பறிபோனாலும் கோவிந்தா கோவிந்தா என்று கூறும் பழக்கம் வந்திருக்குமோ? உண்மையில் கூறுவோரின் பாபத்தினைப் போக்கும்!, மோக்ஷத்திற்க்குச் செல்வதற்கு தடைகளைப் போக்கும்!.
நீங்கள் நெற்றியில் திருமண்காப்பு (திருநாமம்) அணிபவரா?? உங்களைப் பார்த்து கோவிந்தா கோவிந்தா என்று ஏளனம் செய்கிறார்களா? விட்டு விடுங்கள். உங்களால் நாலுபேருக்கு ஸ்ரீவைகுண்டம் கிடைக்கட்டுமே!!.
Narasimha Jeyanthi
Swami Mamunigal Varusha thirunatchathiram – Aipassi – Mulam
10/11/2010
அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலைச் சார்ந்த
காட்டழகியசிங்கர் கோயில்
நூதன உற்சவ விக்ரஹ பிரதிஷ்டை
மூன்றாம் நாள் (26.01.2011) – ஸம்ப்ரோக்ஷணம்
நாள் 26.01.2011
நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள்
(கும்ப லக்னம்)
பகைவனான இரண்யனிடம் சீற்றமும், தன்னுடைய அன்பு பக்தனான ப்ரஹ்லாதனிடம் அருளும் ஓரே சமயத்தில்காட்டிய சிறப்புடையது ஸ்ரீநரஸிம்ஹ அவதாரமே.
ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள காட்டழகியசிங்கர் கோயிலின் நிர்மாணம் எப்போது என்று அறியமுடியவில்லை. இங்குள்ள பெருமாளும், திருமகளும் அமர்ந்துள்ள கோலம் அற்புதமானது..! வந்தவர்களை வாழ்விப்பது..! எந்தவித இடர்களிலிருந்தும் மீட்பது..! அதற்கு மிக முக்கியமான காரணம் பெருமாளும் தாயாரும் அருள்மிகுந்து இருவருமே அபயமுத்ரையோடு அனுக்ரஹிப்பதுவே..!
அரங்கன் வருவதற்கு முன் முனிவர்கள் பலர் அரங்கனுக்காக தவமிருந்தபோது, யானைகளின் அட்டகாசம் மிகுந்தததாகவும், இத்தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக தவமியற்றுவதற்கு ஏதுவாக இந்த பெருமாள் தோன்றியதாகவும் ஒரு செவிவழி செய்தி உண்டு.
இந்த திருக்கோயில் சித்திரைவீதியை நிர்மாணித்த வீரபாண்டியனான, ஜடவர்மன் சுந்தர பாண்டியன் என்கிற கலியுகராமனால், கி.பி.1297ல் புநர் நிர்மாணம் செய்யப்பட்டு, திருக்கோயிலைச் சுற்றி கலியுகராமன் சதுர்வேதி மங்கலம் என்னும் வேதம் ஓதும் அந்தணர்கள் குடியிருப்பைத் தோற்றுவித்ததாய் ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
தனிக்கோயிலுக்கு உண்டான அனைத்து அமைப்புகளையும் உடைய இந்த கோயிலிலுள்ள உற்சவ விக்ரஹம், ஏதோவொரு கலாபகாலத்தில் (அந்நியர்கள் படையெடுப்பின் போது) பாதுகாப்புக்கருதி புலம் பெயர்ந்து, அதற்குப்பின் பல நுாறு ஆண்டுகளாக உற்சவ பிம்பங்கள் ஏதும் இல்லாமலே வழிபாடுகள் நடந்து வந்துள்ளது.
இந்தவொரு பெரும் குறையை நிவர்த்திக்க எம்பெருமான் இப்போதுதான் அனுகிரஹித்துள்ளார் – அனுமதித்துள்ளார்.
ஆம்..! விண்னும் மண்ணும் மகிழும் வண்ணம், சர்வலக்ஷணத்துடன் கூடிய தேஜோமயமான விக்ரஹ பிரதிஷ்டை, நாளது தை மாதம் 12ம் தேதி (26.01.2011) – சப்தமி திதியில் – சித்திரை நட்சத்திரம் கூடிய சித்தயோக நன்னாளில் காலை 0900 மணி முதல் 10.00 மணிக்குள் – கும்பலக்னத்தில் அவனருளுால் நடைபெறயுள்ளது.
இந்த பேரின்பத்தில் தாங்களும் கலந்துகொண்டுய்யுமாறு, திருக்கோயில் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
x
நிகழ்ச்சி நிரல்
முதற் காலம்
தை மாதம் 10ந்தேதி – 24.01.2011 – திங்கட்கிழமை – மாலை 6.00 மணிமுதல் –
ஆச்சார்ய வந்தனம் – மஹா சங்கல்ப்பம் – பகவத் அனுக்ஞை – புண்யாஹவாசனம் – விஷ்வக்ஸேன ஆராதனம் – ரக்ஷாபந்தனம் – யாகசாலை வாஸ்துசாந்தி – பாலிகை பூஜை – ம்ருத்சங்கிரஹனம் – அங்குரார்ப்பணம் – யாகசாலைப் பிரவேசம்- வேத, திவ்யப்பிரபந்தத் தொடக்கம் – சோம, கும்ப பாலிகா ஸ்தாபனம் – அங்குரார்ப்பண ஹோமம் – லகு பூர்ணாஹூதி – சாற்றுமுறை – கோஷ்டி.
இரண்டாம் காலம்
தைமாதம 11ம் தேதி – 25.01.2011 – செவ்வாய் கிழமை
காலை 08.00 மணி முதல்
புண்யாஹம் – கலாகர்ஷணம்(மூலஸ்தானம் செப்பனிடுவதற்காக) – த்வார, கும்ப, மண்டல ஸ்தாபிதம்,
சதுஸ்தானார்ச்சனம் – அக்னி பிரதிஷ்டை – பர்யக்னிகரணம், பஞ்சகவ்ய ப்ரோக்ஷணம்,
மனோன்மான சாந்தி ஹோமம், நேத்ரோன்மீலனம்-(நுாதன பிம்பத்திற்கு) – யதோக்தஹோமாதிகள் –
மஹா பூர்ணாஹூதி – சாற்றுமுறை – கோஷ்டி.
மூன்றாம் காலம்
மாலை 4.30 மணி முதல்
உற்சவ பிம்பத்திற்கு கர்மாங்கஸ்த ஸ்நபநம்
நான்காம் காலம்
இரவு 7.00 மணி முதல்
சதுஸ்தானார்ச்சனை – தத்வ ஹோமம் – யதோக்த ஹோமாதிகள் – ப்ராயசித்த ஹோமம் – மஹாசாந்தி ஹோமம் –
மஹா பூர்ணாஹூதி – சாற்றுமுறை – கோஷ்டி.
ஐந்தாம் காலம்
தைமாதம் 12ம் தேதி – 26.01.2011 – புதன் கிழமை
காலை 7.00 மணி – விஸ்வரூபம்
காலை 7.30 மணி – சதுஸ்தானார்ச்சனை, ஹோமாதிகள், மஹாபூர்ணாஹூதி – பலி –
க்ருஹப்பரீதி -தஸதானம்-யாத்ராதானம்
காலை 9.00 மணி – உற்சவர் மற்றும் கடங்கள் புறப்பாடு
காலை 9.30 மணி – ப்ராண ப்ரதிஷ்டை, மஹா சம்ப்ரோக்ஷணம் (கும்பலக்னம்)KURUKAIKAAVALAPPAN.pdf
காலை 10.00 மணி – மங்கள ஹாரத்தி – சாற்றுமுறை – கோஷ்டி – ஆச்சார்ய மரியாதை.
ஃஃசுபம்ஃஃ
அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலைச் சார்ந்த
காட்டழகியசிங்கர் கோயில்
நூதன உற்சவ விக்ரஹ பிரதிஷ்டை
இரண்டாம் நாள் (25.01.2011) – இரண்டாம் காலம்
http://temp.srirangapankajamcom.officelive.com/WebSitePageEditor/aspctrl.aspx
இரண்டாம் நாள் (25.01.2011) – மூன்றாம் காலம் மற்றும்
நான்காம் காலம்
http://temp.srirangapankajamcom.officelive.com/WebSitePageEditor/aspctrl.aspx
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் !
ந்ருஸிம்ஹம் பீஷணம் பர்த்தும்
மருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் !!
=====================================================================
PILLAI LOKACHARYA VAIBHAVA
(narrated by Sri Sivakumar Kaviyappa)
Email: “kbsivakumar@gmail.com“ )
Sri Pillai Lokacharya was born as the amsam (form) of Kanchi Devaraja (Varadaraja or Perarullalan) Perumal (lord) in the month of Aippasi under the star Thiruvonam in year 1205 CE. Lord Devaraja took this avatar in order to document and immortalize the teachings and writings of our Universal Guru Sri Ramanjuar.
The greatest asset to our tradition is the writings of Azhwars as Naalayira Divya Prabandam ( 4000 devotinoal hymns) and the Ashta:dasa Rahasyas of Sri Pillai Lokacharya. Prior to Sri Ramanuja the esoteric truths of the Vedas and scriptures were revealed only to a select few disciples by the great Master’s and that too only after the student had proved his mettle and shown a great thirst in acquiring spiritual knowledge. It was Sri Ramanuja who out of great compassion to mankind decided to part with the secrets in our scriptures revealing the god head to all those who sought it.
After Sri Ramanujar, his successors propagated his teachings with great care. How ever sensing they could be misled or misinterpreted over time the great Master Sri Pillai Lokacharya compiled all the teachings in to 18 different works. They are
1) MumuKshuppadi
2) Parandapadi
3) Sriyahpathipadi
4) Ya:druchikapadi
5) Arttha panchakam
6) Prapannaparithra:na:m
7) Samsa:ra Sa:mra:jyam
8) Archira:di
9) Navavidha sambandham
10)Thaththwa thrayam
11)Thaththwa se:kharam
12) Prame:ya se:kharam
13) Sri: Vachana bhu:shaman
14) Navarathnama:la
15) Sa:rasangraham
16) Thani pranavam
17) Thani dvayam and
18) Thani charamam
These 18 works for Sri Pillai Lokacharya are collectively called as Ashta:dasa:Rahasyas.
Ashta:dasa means eighteen and Rahasyas means secrets. As these teachings were the great secrets extracted from vast ocean of scriptures they are called Rahasyas. The teachings were closely guarded secrets and were revealed only to a select prior to these works hence were also called Rahasyas.
His works broadly summarize the teachings of Sri Ramanujar and the doctrine of unconditional surrender (SARANAGATI). He stayed in the earth for 106 years and ended his life after protecting Sri Lord Ranganatha from muslim invasion in the year 1311 CE.
Sri PillaiLokacharyar was succeeded by the illustrious Sri Manavala Mamuni (1370 – 1444). He his widely considered to be re-incarnation of Sri Ramanujar himself. He has glorified these works in his UPADESA: RATHNA: MALA.
==============================================================
ஸ்ரீரங்கம் :: காட்டழகியசிங்கர் திருக்கோவில் தரிசனம்
காட்டழகியசிங்கர் திருக்கோவில் தரிசனம்
காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||
——————————————————————–
ஸ்ரீரங்கத்தைப் பற்றிய அற்புதமான ச்லோகம் இது.
திருவரங்கப் பெருநகரில் உபய காவேரி மத்தியில் துயிலும் அரங்கனின் திருக்கோவில் எவ்வளவு மகிமையுடன் திகழ்கிறதோ அதற்குச் சற்றும் குறைவு இல்லாமல் திகழ்கிறது, அதே உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில்.
அதென்ன காட்டழகிய சிங்கர்..? காட்டழகியசிங்கர் மட்டுமா? மேட்டழகியசிங்கரும் இங்கு உண்டே!
வைணவர்களுக்கு பெரிய கோவில் என்று போற்றத்தக்கதான திருவரங்கம் பெரிய கோவிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் சந்நிதிகள் மிகப் பெருமை வாய்ந்தவை. அதிலும் மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் திருக்கோவிலிலேயே சந்நிதி கொண்டிருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோரும் தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது.
கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்ததாம். அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம். மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றாலும், கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர்.
இனி, காட்டழகிய சிங்கருக்கு வருவோம்…
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்… இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. திருவானைக்காவுக்குப் பிறகு திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் இதர கொடிய மிருகங்களும் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அந்த நிலையில், யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்றதுதான் இந்தக் கோவில். கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழைமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருந்தபோதும், கி.பி.1297 வாக்கில், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்தக் கோவிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோவில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது.
(உபரி தகவல்: இந்த மன்னனின் வீரதீரங்களைச் சொல்லும் ஒரு மெய்கீர்த்தி (கல்வெட்டு), திருவெள்ளறை திவ்யதேசத்தில் ஆலய சிறுகோபுரத்து நுழைவாயிலில் ஒரு புறத்தில் இருப்பதாக திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதில் சோழன் – பாண்டியன் மோதலும், மோதலின் விளைவாக ஒருவரின் அரண்மனைகளை ஒருவர் அழித்துச் சென்றதும், ஆனால், ஒருவரின் பெயரால் கோவிலில் நிபந்தங்களை ஏற்படுத்திய செயலுக்கு மதிப்பளித்து, எதிராளியாக இருந்தாலும் அவர் பெயராலேயே அந்த நிபந்தம் தொடர்ந்து வர இந்தப் பாண்டியன் வழி ஏற்படுத்திச் சென்றதையும் அந்த மெய்கீர்த்தி உணர்த்தும் விதத்தைத் தெரிவித்தார்.)
ஸ்ரீரங்கம் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோவிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது.
கோவிலின் உள்ளே செல்கிறோம். பலிபீடத்தைத் தாண்டி, கோவிலின் முன் மண்டபத்துக்குள் செல்கிறோம். மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள். திருச்சுற்றில் வலம் வருகிறோம். பரிவார தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம் முதலில்! இதில் யோகஅனந்தர், யோக நரஸிம்ஹர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது. காயத்ரி மண்டபத்தில் யோக நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.
பிராகார வலத்தில், சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன. வலப்புறத்தில் வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்களையும் காண்கிறோம்.
உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள் பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது. கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்ஹராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்ஹரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்ஹர், யோக நரஸிம்ஹர், அனந்த நரஸிம்ஹர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்ஹரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.
குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களில் தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்ஹரின் உருவம் அவ்வளவு அழகு; தெளிவு!
சுற்று வலம் வந்து, சந்நிதிக்குள் செல்கிறோம். பழைமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது. உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்; ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்|| என்று ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரம் நம்மை ந்ருஸிம்ஹப் பெருமானைக் குறித்த தியானத்துக்கு தூண்டுகிறது. சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.
சகல நலன்களையும் வாரி வழங்கும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை தரிசித்து வெளியே வருகிறோம்.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. அதுபோல்,பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிங்கப்பெருமானின் வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாததிலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. இந்தக் கோவிலில் உற்ஸவர் தனியாக இல்லை. எனவே, மற்ற உற்ஸவங்கள் அதாவது பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் போன்றவை நடைபெறுவதில்லையாம்!
ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் பிரதோஷ வழிபாடா? எப்படி சாத்தியம்?
நரஸிம்ஹரும் மூன்று கண்களை உடையவர். பிரதோஷ காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். ஆனால், இவர் ருத்ர அம்சம் இல்லை. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரம். ஆனால், ஸ்ரீந்ருஸிம்ஹ ஸ்வாமி அவதாரம் செய்தது, பிரதோஷ காலத்தில்தான்! காரணம், ஹிரண்யகசிபு கேட்டுப் பெற்ற வரம் அது. பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல் பிரதோஷ காலத்தில் அந்த வரத்தை அனுசரித்து ந்ருஸிம்ஹ அவதாரம் நிகழ்ந்தது. அதனால், இங்கே பிரதோஷ சிறப்பு வழிபாடு உண்டு.
இந்தக் கோவிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரஹஸ்ய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் காட்டழகியசிங்கர் திருக்கோவிலே! ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்.
ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ரஞ்ஜித புண்யமூர்த்தே|
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்||
– என்று லக்ஷ்மி ந்ருஸிம்ஹரைத் துதித்தபடி கோயிலில் இருந்து வெளியே வருகிறோம். என்றும் எல்லோருக்கும் காட்டழகிய சிங்கப் பெருமானின் திருவருள் கிடைப்பதாக!
காலை 6.15 முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 வரை கோவில் திறந்திருக்கும். கோவில் தொடர்புக்கு: 0431- 2432246
– கட்டுரை மற்றும் படங்கள் :
செங்கோட்டை ஸ்ரீராம்
www.senkottaisriram.blogspot.com
From: Rajadesikan Sreenivasan
Phone: 9940018540
E-mail: rajadesikan@gmail.com
Message:
Adiyen Dasan Swami
Is it possible to go to Srirangam Kaatazghiya singar Koil from Bangalore at this time (Time now is 10.30 PM)
Yes.. the answer is .. read Srirangapankajam’s text on Narasinma Jayanthi.,.
It is a journey through the text which picturizes the tour ..
Excellent.
Swami Sevai Solla Malathu..
Tears RollDown.. from my eyes.. to read the way the article is written… Excellent..
Dasan
Rajadesikan
Shri nrisimha, jaya nrisimha, jaya jaya nrisimha
prahladesha jaya padma-mukha-padma bringa
“All glories to Nrisimhadeva, who is the Lord of Prahlada Maharaja and, like the honey bee, is always engaged in beholding the lotus-like face of the goddess of fortune.”
ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !
கோயில்களில்… அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை செய்வது என்பது பழகிய நடைமுறை. ஆனால், நகரங்களில் உள்ள பெரும்பாலான பெரிய கோவில்களில் கூட்ட நெரிசல்… கிராமத்துக் கோயில்கள் பலவற்றிலோ, முறையான பயிற்சி பெறாத அர்ச்சகர்கள். இந்த நிலையில், அஷ்டோத்திர அர்ச்சனை என்று சங்கல்பம் செய்துகொண்டு, நூற்றியெட்டுக்குப் பதிலாக பதினெட்டு அல்லது இருபத்தியெட்டு திருநாமாக்களால் அர்ச்சனை செய்துவிட்டு, ஏனோதானோவென்று நைவேத்தியமும் செய்துவிட்டு, பிரசாதத் தட்டை கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவதை அன்றாடம் சந்நிதிகளில் காண்கிறோம். நம் இந்து மதத்தில்தான் கேள்விகள் கேட்பது பரம்பரை பிரசித்தமாயிற்றே. சிலர் முனகிக் கொண்டே, பெருமானின் வழிபாட்டில் மன ஈடுபாட்டைக் காட்டாமல், நடைபெறும் தவறுகளிலேயே மனத்தைச் செலுத்தி, ஏனடா கோவிலுக்கு வந்தோம் என்ற மன நிலையில் வெளியேறுகின்றனர். இதுவும் அன்றாடக் காட்சிதான்!
சரி… கோவில் என்று வந்தாயிற்று! வழிபாடு என்பதும் நம் மனத்தைப் பொறுத்தது. இது கீதை நாயகன் சொன்ன விஷயம்தான்! எனவே இறை வழிபாட்டைத் தவிர உள்ள கோயிலின் மற்ற நடவடிக்கைகளில் நம் மனத்தை (கருவறையில் இருக்கும் அந்தப் போது மட்டும்) செலுத்தாமல், இந்த அஷ்டோத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு வரிசையில் செல்லும் போதே அர்ச்சித்துக் கொண்டு செல்லுங்கள். உள்ளே அர்ச்சகர் உங்கள் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ஏற்ப பகவானின் பாதத்தில் துளஸி/ பூக்களை சமர்ப்பிப்பதாக மனத்தில் எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் வழிபாடு பூர்த்தியாகும்.
செம்மொழித் தமிழும் பகவானுக்கு பிரியமான மொழிதான். எனவே சம்ஸ்க்ருத வார்த்தை பழக்கம் இல்லாதவர்கள், தமிழில் அதன் அர்த்தத்தைச் சொல்லி, போற்றி போற்றி என்று முடித்து அர்ச்சிக்கலாம்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
– என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஆண்டாளம்மை காட்டிய வழியில் இந்த கிருஷ்ண அஷ்டோத்திரத்தை (நூற்றியெட்டு போற்றி வழிபாட்டை) சொல்லி வழிபடுவோம். பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண அஷ்டோத்திரமே அர்ச்சகர்களால் சொல்லப்படுகிறது.
எனவே, இந்த நாமாக்களை அச்சு எடுத்து (பிரிண்ட் எடுத்து) கையில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். சமஸ்கிருத நாமாக்களை இயன்ற அளவுக்கு பதம் பிரித்து, எளிமையாகச் சொல்ல வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
சம்ஸ்கிருத அர்ச்சனைப் பெயராக இருந்தால், ஓம் என்று முதலிலும் நம: என்று பின்னாலும் சேர்க்கவேண்டும். தமிழில் என்றால், ஓம் என்பது பொது. எனவே ஓம் சொல்லி, போற்றி என்பதை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்
0. ஓம்……………………நமஹ – ஓம் ……………………………… போற்றி!
1. க்ருஷ்ணாய – கருமை நிறம் உள்ளவரே
2. கமலநாதாய – ஸ்ரீலட்சுமி நாதரே
3. வாஸுதேவாய – வஸுதேவ புத்திரரே
4. ஸநாதநாய – பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே
5. வஸுதேவாத்மஜாய – வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே
6. புண்யாய – புண்ணியத்தைச் செய்பவரே
7. லீலாமானுஷ விக்ரஹாய – விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே
8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய – ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே
9. யசோதாவத்ஸலாய – யசோதையிடம் மிக்க (வாத்சல்யம்) அன்பு கொண்டவரே
10. ஹரயே – அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே
11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய – நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே
12. தேவகீநந்தனாய – தேவகியின் புத்திரரே
13. ஸ்ரீஸாய – திருமகள் நாயகரே
14. நந்தகோப ப்ரியாத்மஜாய – நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே
15. யமுனா வேக ஸம்ஹாரிணே – யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே
16. பலபத்ர ப்ரிய அநுஜாய – பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே
17. பூதனாஜீவித ஹராய – கொல்லவந்த கொடிய பூதனையின் உயிரைப் போக்கியவரே
18. சகடாசுர பஞ்சனாய – சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே
19. நந்த வ்ரஜஜநா நந்திதே – வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவரே
20. சச்சிதானந்த விக்ரஹாய – சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே
21. நவநீத விலிப்தாங்காய – புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட உடம்பினைக் கொண்டவரே
22. நவநீத நடாய – வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே
23. அநகாய – தோஷம் சிறிதும் இல்லாதவரே
24. நவநீத நவாஹாராய – புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது செய்பவரே
25. முசுகுந்த ப்ரஸாதகாய – முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே
26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய – பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே
27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே – வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான உருவம் கொண்டவரே
28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே – சுகாசாரியாரின் அமுத வாக்காகிய பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே
29. கோவிந்தாய – பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே
30. யோகிநாம்பதயே – யோகிகளுக்கு தலைவரானவரே
31. வத்ஸ வாடசராய – கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே
32. அநந்தாய – எவராலும் அறிய முடியாதவரே
33. தேநுகாசுர மர்த்தனாய – தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே
34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய – திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு இணையாக்கியவரே
35. யமளார்ஜுன பஞ்சனாய – யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை முறித்தவரே
36. உத்தாலதால பேத்ரே – உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே
37. தமால ச்யாமளாக்ருதயே – பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம் உள்ளவரே
38. கோபகோபி ஈஸ்வராய – கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே
39. யோகிநே – தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே
40. கோடிசூர்ய சமப்ரபாய – கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி பொருந்தியவரே
41. இளாபதயே – பூதேவியாக இளையின் பதியே
42. பரஸ்மை ஜ்யோதிஷே – பரஞ்சோதி ஸ்வரூபமானவரே
43. யாதவேந்த்ராய – யாதவர்களின் தலைவரே
44. யதூத்வஹாய – யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே
45. வநமாலினே – வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே
46. பீதவாஸஸே – பீதாம்பரதாரியே
47. பாரிஜாத அபஹாரகாய – பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே
48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே – கோவர்த்தன மலையை அநாயாசமாக எடுத்தவரே
49. கோபாலாய – பசுக்களைக் காப்பவரே
50. ஸர்வபாலகாய – எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே
51. அஜாய – ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே
52. நிரஞ்ஜனாய – தோஷம் சிறிதும் அற்றவரே
53. காமஜனகாய – மன்மதனுக்கு தந்தையானவரே
54. கஞ்ஜலோசனாய – தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே
55. மதுக்னே – மது என்னும் அசுரனைக் கொன்றவரே
56. மதுரா நாதாய – மதுரையம்பதிக்குத் தலைவரே
57. த்வாரகா நாயகாய – துவாரகாபுரியின் தலைவரானவரே
58. பலிநே – மிகுந்த பலம் பொருந்தியவரே
59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே – பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே
60. துளஸீ தாமபூஷணாய – துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே
61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே – சியமந்தக மணியைக் கொண்டவரே
62. நரநாராயணாத்மகாய – நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே
63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய – திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்தவரே
64. மாயினே – மாயையினை உடையவரே
65. பரமபூருஷாய – புருஷ உத்தமரே
66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய – முஷ்டிகாசுரன், சாணூரன் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே
67. ஸம்சார வைரிணே – சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே
68. கம்ஸாரயே – கம்சனுகுப் பகையானவரே
69. முராரயே – முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே
70. நரக அந்தகாய – நரகன் எனும் அசுரனை முடித்தவரே
71. அநாதி ப்ரஹ்மசாரிணே – தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே
72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய – கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின் துக்கத்தைத் துடைத்தவரே
73. சிசுபால சிரச்சேத்ரே – சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே
74. துர்யோதன குலாந்தகாய – துரியோதனன் குலத்தை அழித்தவரே
75. விதுர அக்ரூர வரதாய – விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தவரே
76. விஷ்வரூப ப்ரதர்சகாய – அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக் காட்சியை அளித்தவரே
77. ஸத்யவாசே – சத்தியமான வாக்கினை உடையவரே
78. ஸத்ய சங்கல்பாய – சொன்ன சொல் தவறாதவரே
79. ஸத்யபாமாரதாய – சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே
80. ஜயிதே – எப்போதும் வெற்றியைக் கொண்டவரே
81. ஸுபத்ரா பூர்வஜாய – சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)
82. ஜிஷ்ணவே – ஜயசீலரே
83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய – பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே
84. ஜகத்குரவே – அகில உலகங்களுக்கும் குருவானவரே
85. ஜகந்நாதாய – அகில உலகங்களுக்கும் தலைவர் ஆனவரே
86. வேணுநாத விசாரதாய – புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே
87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே – விசுஷபாசுரனைக் கொன்றவரே
88. பாணாசுர பலாந்தகாய – பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல் முடித்தவரே
89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே – தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே
90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய – மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே
91. பார்த்தசாரதயே – அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே
92. அவ்யக்தாய – இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே
93. கீதாம்ருத மஹோததயே – கீதை எனும் அமுதக் கடலானவரே
94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய – காளியன் எனும் பாம்பின் படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே
95. தாமோதராய – யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில் கொண்டவரே
96. யஜ்ஞபோக்த்ரே – யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே
97. தாநவேந்த்ர விநாசகாய – அசுரர் தலைவனை நாசம் செய்தவரே
98. நாராயணாய – ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே
99. பரப்ரஹ்மணே – பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே
100. பந்நகாசந வாஹநாய – பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக் கொண்டவரே
101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய – நீரில் விளையாடிய கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே
102. புண்யஸ்லோகாய – புண்ணியமே கீர்த்தியாக உடையவரே
103. தீர்த்தபாதாய – பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே
104. வேதவேத்யாய – வேதங்களால் அறியப்படுபவரே
105. தயாநிதயே – தயைக்கு இருப்பிடமானவரே
106. ஸர்வ பூதாத்மகாய – எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே
107. ஸர்வ க்ரஹ ரூபிணே – சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும் உடையவரே
108. பராத்பராய – உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே
நாநாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
செங்கோட்டை ஸ்ரீராம்
www.senkottaisriram.blogspot.com
http://temp.srirangapankajamcom.officelive.com/WebSitePageEditor/aspctrl.aspx
our sincere thanks to sri Aathan Kasthuri rangan swami
WHAT HAPPENS IN HEAVEN
This is one of the nicest e-mails I have seen and is so true:
I dreamt that I went to Heaven and an angel was showing me around.
We walked side-by-side inside a large workroom filled with angels.
My angel guide stopped in front of the first section and said,
‘This Is the Receiving Section. Here, all petitions to GOD said in prayer are Received..’
I looked around in this area, and it was terribly busy with so many
angels sorting out petitions written on voluminous paper sheets and scraps from people all over the world..
Then we moved on down a long corridor until we reached the second section.
The angel then said to me, ‘This is the Packaging and Delivery Section.
Here, the graces and blessings the people asked for are processed and
delivered to the living persons who asked for them.’
I noticed again how busy it was there. There were many angels working hard at that
station, since so many blessings had been requested and were being packaged for delivery to Earth
Finally at the farthest end of the long corridor we stopped at the Door of a very small station
To my great surprise, only one angel was Seated there, idly doing nothing.
‘This is the Acknowledgment Section,’ My angel friend quietly admitted to me.
He seemed embarrassed ‘How Is it that there is no work going on here?’ I asked.
‘So sad,’ the angel sighed. ‘After people receive the blessings that
they asked For, very few send back acknowledgments .’
‘How does one acknowledge GOD’s blessings?’ I asked.
‘Simple,’ the angel answered. Just say, ‘Thank you, LORD.’
‘What blessings should they acknowledge?’ I asked.
‘If you have food in the refrigerator, clothes on your back,
a roof overhead and a place to sleep you are richer than 75% of this world.
If you have money in the bank, in your wallet, and spare change in a dish,
you are among the top 8% of the world’s wealthy .’
‘And if you get this on your own computer, you are part of the 1% in
the world who has that opportunity.’
Also ……
‘ If you woke up this morning with more health than illness …
You are more blessed than the many who will not even survive this day .’
‘If you have never experienced the fear in battle, the loneliness of imprisonment,
the agony of torture, or the pangs of starvation ..
You are ahead of 700 million people in the world.’
‘If your parents are still alive and still married …you are very rare .’
‘If you can hold your head up and smile, you are not the norm,
you’re unique to all those in doubt and despair.’
Ok, what now? How can I start?
If you can read this message, you just received a double blessing
in that someone was thinking of you as very special and you are more
blessed than over two billion people in the world who cannot read at all.
Have a good day, count your blessings, and if you want,
pass this along to remind everyone else how blessed we all are.
ATTN:
Acknowledge Dept.: ‘Thank you Lord, for giving me the
ability to share this message and for giving me so many wonderful people to share it with.
————————————–———————————————————————————————————————————————————————————————-
EKATTUTHANGAL UTSAVAM – 13.02.2011-
MAYILAI SRI.PEYAZHWAR MANGALAASAASANAM
THIRUVALLIKENI SRI PARTHASARATHY SWAMI
MAYILAI SRI.PEYAZHWAR
FOR PICTURES PLS CLICK HERE
https://picasaweb.google.com/athankasturi/
EKATTUTHANGALUTSAVAM13022011MAYILAISRIPEYAZHWAR
MANGALAASAASANAM?feat=directlink
——————————————————————————————————————————————————————————–
THIRUVALLIKENI SRI PARTHASARATHY SWAMI ROHINI PURAPADU – 12.02.2011
FOR PICTURES PLS CLICK HERE
——————————————————————————————————————————————————————————————
THIRUVALLIKENI RATHA SAPTHAMI UTSAVAM – 10.02.2011
FOR PICTURES PLS CLICK HERE
—————————————————————————————————————————————————————-————————————————————————————————————————————————————————–
117TH VARUSHA THIRUNANGUR 11 GARUDA SEVAI UTSAVAM
FROM 03.02.2011 TO; 05.02.2011
THIRUMANGAI AZHWAR KUMADAVALLI NATCHIYAR
FOR PICTURES TAKEN ON 05/02/2011 PLS CLICK HERE
————————————————————————————————————————————————————-